மூக்குத்தியும் தலைவலியும்..




பீர்பால் நகைச்சுவையாய், புத்திசாலித்தனமாய் பேசக் கூடியவர் மட்டுமல்ல. மாமேதை என்று புகழக் கூடிய அளவுக்கு உயர்ந்தவர் என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

அரசி நந்தா தேவி அடிக்கடி தலைவலியால் அவதிப் பட்டார். நந்தா தேவியின் வேதனையை தாங்க முடியாத அக்பர் நாட்டில் உள்ள பல வைத்தியர்களை வரவழைத்து தலைவலியைப் போக்க ஏற்பாடு செய்தார். வைத்தியர்களும் அரசியாருக்கு ஏற்பட்ட தலைவலியை போக்குவதற்கு மருந்தை கொடுத்தார்கள். நாட்கள் தான் சென்றதே தவிர அரசியாரின் தலைவலி தீர்ந்தபாடில்லை. அக்பர் மிகுந்த கவலை அடைந்தார். அக்பரின் வழங்குமாறு உத்தரவிட்டார்.
அமைச்சர்களே மன்னர் அளித்த தண்டனையைக் கேட்டதும் அதிர்ந்து போனார்கள்.

'காவலாளி செய்த சிறு தவறுக்கு தண்டனையா?' என்று மரண வேதனைப்பட்டார்கள். அமைச்சர்கள் அனைவரும் பீர்பாலைப் பார்த்தார்.

பீர்பாலால் தான் இந்த தண்டனையை ரத்து செய்வதற்கு அரசருடன் பேசமுடியும் என்பது அவர்களின் எண்ணம்.

'அரசே அருள் கூர்ந்து நான் சொல்வதை தாங்கள் கேட்க வேண்டும் என்றார். கோபத்தின் உச்சக் கட்டத்தில் இருந்த அக்பர், 'நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். நான் கேட்கத் தயராக இல்லை! நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியாதா? என்னிடம் நீங்கள் என்ன கேட்டாலும் அதற்கு நான் முடிவு எடுப்பேன்! என்றார் அக்பர் கோபத்துடன்.

'அரசே இந்த காவலாளிக்கு உடனே மரண தண்டனையை நிறைவேற்றுங்கள்! என்று தான் கூற வந்தேன்!' என்றார் பீர்பால். திகைப்பில் ஆழ்ந்த அக்பர் பீர்பாலின் சாதுர்யமான பேச்சாற்றலை எண்ணி மகிழ்ந்து பாராட்டியதோடு காவலாளியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.